
வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ள சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை " ஐ " குழு எனவும் "சவா" குழு எனவும் அடையாளப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழுவினர் எழுதுமட்டுவாள் பகுதியில் வாள்கள் , இரும்பு கம்பிகள் . பெல்லுகளுடன் 13 இளைஞர்கள் ஒன்று கூடி மோதல் ஒன்றுக்கு தயாராக "வடி" ரக வாகனத்தில் செல்வதாக இருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இரகசிய தகவல் கொடிகாம பொலிசாருக்கு கிடைக்க பெற்றதை அடுத்து கொடிகாம பொலிசார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது, பொலிசாரை கண்ட குறித்த இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளனர்.
அக்குழுவினர் தப்பிச்செல்லும் விடயம் தொடர்பில் மருதங்கேணி பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து காவலரணில் தயார் நிலையில் இருந்த போலீசார் பளை இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்ததுடன், வாகனத்தில் இருந்து வாள்கள், இரும்பு கம்பிகள், பொல்லுகள் என்பவற்றுடன் 13 இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யபட்ட 13 இளைஞர்களையும் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.