
கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் 518 ஆவது நாளாக இன்றும் கேப்பாப்பிலவு மக்களால் தொடரப்பட்டுவருகின்றது.
இந் நிலையில் நாம் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதனை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள எமது வன்னி தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்மை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோன்று எமது பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். எனவே விவசாய பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அங்கஜன் இராமநாதனும் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.