
இதன்படி பெருமளவான இளைஞர்களை நாட்டின் கடல்வளத் துறையில், குறிப்பாக நண்டு ஏற்றுமதி துறையில் ஈடுபடுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது 1200 பேர் நண்டு ஏற்றுமதி துறையில் தொழிலில் ஈடுபடுவதாகவும், மேலும் இதனை வடக்கு, கிழக்கில் வியாபிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போர் காரணமாக பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் நண்டு ஏற்றுமதி துறையில் ஈடுபடுவதன் மூலம் மாதாந்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சம்பளம் அவர்களுக்கு கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வருடத்திற்கு ஒரு பில்லியன் ரூபா அந்நியச் செலாவணி, நண்டு ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.