குறித்த குழந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ; இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் தனது இளைய குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார்.
இதனையடுத்து குழந்தை சத்தமிட்டு அழவே அயலவர்கள் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.