குறித்த விபத்து அநுராதபுரம் – நொச்சியாகம, லிந்தவெவ 30 தூண் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்தவரும் லிந்தவெவ, 30ஆம் தூண் பகுதியை வசிப்பிடமாக கொண்டவராவார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்க்க ஓமந்தையில் இருந்து வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் விபத்தை ஏற்படுத்திய நபர் காருடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.