இலங்கை மின்சார சபையினர் யாழ். அச்சுவேலி - பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர். இதன்போது நிலத்துக்குள் இருந்து கை, கால், மண்டையோடு என மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இவ் விடயம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.