
அவர்களிடமிருந்து 05 கிலோ 240 கிராம் நிறையுடைய கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நொச்சியாகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 30 மற்றும் 40 வயதுடைய மீரிகம மற்றும் வெயாங்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.