
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோவும் 585 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 29 வயதுகளையுடைய வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.